ஜகர்த்தா ஆசிய விளையாட்டு போட்டி: கோலாகலமாக இன்று தொடங்குகிறது…


இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்த்தாவில் இன்று 18 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன.

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது.

இன்றைய தொடக்க விழா அணிவகுப்பில் இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மூவர்ண கொடி ஏந்தி வரவுள்ளார்ஃ
36 வகையான போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் 277 வீரர்கள், 247 வீராங்கனைகள் உட்பட 524 பேர் இடம் பிடித்துள்ளனர்.

அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள 52 பேர் உள்ளனர்.