ஜப்பான் கோயிலில் உள்ள நேதாஜியின் உடலை மீட்க மகள் கோரிக்கை


நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் தனது தந்தையின் உடலை ஜப்பானிலிருந்து மீட்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய தேசிய ராணுவத்தைத் தோற்றுவித்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் 18ஆம் தேதி (இன்று) அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது மகள் அனிதா போஸ் தன் தந்தையின் உடல் ஜப்பானிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நேதாஜி காலமானார் என்றும் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவரது உடல் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலிலேயே உள்ளது என்றும் அனிதா கூறியுள்ளார்.