ஜெ.,-வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்…

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியாலை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அவர் லண்டனில் இருப்பதால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரிக்க வசதியாக, சேப்பாக்கத்தில் உள்ள பசுமை தீர்பாயத்தில் சில ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.