ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அதிமுக சார்பில் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் இன்று காலை 10 மணியளவில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இதற்கு முன்னதாக, சென்னை அண்ணாசாலையில் அமைந்திருக்கும் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக புறப்படும் அவர்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அருகே உறுதியேற்பு விழாவும் நடைபெறுகிறது. அதேப்போன்று, தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தயிருக்கின்றனர்.