ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு : சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

சாத்தான் குளத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான குழு வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.ஆவணங்களை டி.எஸ்.பி. அனில் குமாரிடம் ஒப்படைப்பது பற்றிய உத்தரவு சிறிது நேரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.