சிறுமி பலாத்கார வழக்கு : சாமியார் ஆசாராம் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு..


சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜோத்பூர் அருகே மனாய் ஆசிரமத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சாமியார் ஆசாராம் பாபு உட்பட 5 பேர் போஸ்கோ சட்டத்தில் கைதாகி ஜோத்பூர் சிறையில் உள்ளனர். தீர்ப்பை அடுத்து அரியானா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை உத்தரவிட்டுள்ளது.