வரும் ஜூலையில் முதல் சூரிய கிரகணம் : செய்ய வேண்டியவை… செய்ய கூடாதவை..


அதிபெரும் மூன்று முக்கிய வான் நிகழ்வுகள் இம்மாதம் ஜூலையில் தொடர்ந்து நடைபெற உள்ளன. அதில் முதலாவதாக இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது.

இந்திய நேரப்படி காலை 7-15 மணியளவில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன. இந்த நிகழ்வு முழுமை பெற்ற பிறகு சூரியன் ‘ரத்தச் சிவப்பு’ நிறத்தில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் முழுமையாக மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகளில் தெளிவாக பார்க்கலாம். இந்தியாவில் இது பகுதியளவே தெரியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் சூரிய கிரகணத்தில், ஒரே நேர்கோட்டில் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை சந்தித்துக்கொள்கின்றன. சுமார் ஒருமணி நேரம் 13 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த கிரகணம் காலை 8.31 மணியளவில் முடிவுக்கு வருகிறது.
சூரிய கிரகணம் ஏற்படும் போது செய்ய கூடாதவை

சூரிய கிரகணத்தை சாதாரண கண் கண்ணாடிகள், எக்ஸ்-ரே ஃபிலிம்ஸ், புகைப்படங்கள் எடுக்க பயன்படும் நெக்டிவ்ஸ் ஆகியவற்றை கொண்டு கிரகணத்தை பார்க்க கூடாது.

முக்கியமாக சூரியனை நேரடியாக பார்க்க கூடாது. கேமரா லென்ஸ் அல்லது தொலைநோக்கி வழியாகவும் பார்க்கக் கூடாது. இவ்வாறு செய்தால் கண்கள் எரிச்சலுக்கு உண்டாக்கலாம்.

சூரிய கிரகணம் ஏற்படும் போது பயன்படுத்தப்படும் சிறப்பு பாதுகாப்பு ஃபில்டர்கள் பயன்படுத்தாமல், அதை கேமராவில் புகைப்படம் எடுக்கக்கூடாது.
மேலும் தண்ணீர், முக கண்ணாடி வழியாகவோ அல்லது வேறேதேனும் பொருட்களை வைத்தோ சூரிய கிரகணத்தை பார்க்க முற்படாதீர்கள்.

சூரிய கிரகணம் ஏற்படும் போது செய்ய வேண்டியவை

சூரிய கிரகணம் ஏற்படும் போது அதை பார்கக விரும்புபவர்கள், அதற்காக தயாரிக்கப்படும் கண் கண்ணாடிகளை கொண்டு பார்க்க வேண்டும்.

வெறும் கண்ணில் சூரியனை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது.
வீட்டிலேயே செய்யப்பட்ட ’பின்ஹோல் கேமரா’ மூலம் சூரிய கிரகணத்தை பார்ப்பது சிறந்த வழியாகும்.
சூரிய கிரகணம் பகுதியளவு ஏற்பட்டாலும், அதை வெறும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது சென்னை உட்பட பல பகுதிகளில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வானம் மேக மூட்டத்துடன் தான் காணப்படும். மேலும் நாளை நடைபெறும் சூரிய கிரகணம் காலை 7 மணிக்கு மேல் தோன்றுவதால் இந்தியாவில் தெரிவது அரிதுதான்.

எனினும், நாளை நடைபெறும் சூரிய கிரகணத்தை அடுத்து, ஜூலை 27ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.54 மணியளவில் சந்திர கிரகணம் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, ஜூலை 31ம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரும் கண்கவர் வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. இதை காண உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளது.

2003ம் ஆண்டின் போது செவ்வாய் கிரகம் பூமிக்கு 55.7 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வந்தது. ஆனால் இந்தாண்டு ஏற்படும் நிகழ்வில் செவ்வாய் கிரகம் 57.6 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பூமியை சந்திக்கவுள்ளது.

பூமியும், செவ்வாய் கிரகமும் இந்த அளவில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு 60,000 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுவதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.