தெலங்கானாவின் முதலமைச்சராக 2 ஆவது முறை பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக  2வது முறையாக சந்திரசேகரராவ் பதவியேற்றார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நேற்று நடந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபை சந்திரசேகர ராவ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் ராவ் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் 18 அமைச்சர்கள் பதவியேற்றனர்.