இரவு 11.30 நாகை அருகே கரை கடக்கும் கஜா: சென்னையில் மிதமான மழை பெய்யும் என தகவல்

கஜா புயல் இரவு 11.30 மணிக்கு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கஜா புயல் காலை 9.30 மணி நிலவரப்படி நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 25 கிமீ நீள் வட்ட அளவில் கஜா புயல் நாகையை நெருங்கி வருகிறது. 18 கி. மீ வேகத்தில் கஜா புயல் நாகையை நெருங்கி வருகிறது. இரவு 11.30 மணி அளவில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நாகை, தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை மட்டுமே பெய்யக் கூடும். பெரிய அளிவல் தாக்கம் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.