கலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஓன்றியம் கீழப்பூங்குடி கிராமத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மரியாதை செய்த போது

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 2-வது நினைவு தினம் இன்று திமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி,இளைஞர் அணித்தலைவர் உதயநிதி, மூத்த நிர்வாகிகள் துரைமுருகள்,உட்பட திமுக நிர்வாகிகள் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலுர்துாவி மரியாதை செய்தனர்.

இதுபோல் திமுக தொண்டர்கள் நகரம்,கிராமம் பட்டிதொட்டி எங்கும் கலைஞரின் உருவப்படத்திற்கு மரியாதை செய்து வருகின்றனர்.

கோபாலபுரம் கலைஞர் இல்லத்தின் முன்பு வைக்கப்பட்டள்ள அவரின் உருவப்படத்திற்கு பலர் மரியாதைசெய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஓன்றியம் கீழப்பூங்குடி கிராமத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மரியாதை செய்த போது