ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் : பிரதமருக்கு கமல் கடிதம்..

நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.