காவல்துறை விசாரணையின் போது சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி புகார்..

கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை -மகன் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

காவல்துறையினரின் மனி உரிமை மீறல் குறித்து மனித உரிமை ஆணையத்தில் திமுக மகளிர் அணிச் செயலாளரும்,துாதுக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட் பக்கத்தில்

சாத்தான்குளம் காவல்துறை விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறேன். இருவரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். என பதிவிட்டுள்ளார்.