காரைக்காலில் இன்று 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை காரைக்காலில் 424 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்னன் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.