காரைக்குடியில் அமமுக மாவட்ட செயலாளர் பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல்..

சிவகங்கை மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தேர்போகி பாண்டி அறிமுக கூட்டம் மற்றும் அமமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா காரைக்குடி கல்லுாரி சாலையில் மாலை நடைபெற்றது.

விழாவில் செய்திசேகரித்து புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்கள் மீது மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் கெட்டவார்த்தைகளால் மிக மோசமாக திட்டியவுடன் பத்திரிக்கையாளர்களை மிரட்டினர்.

அப்போது உடனிருந்த வழக்கறிஞர் குரு.முருகானந்தம் பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
அதனைத் தொடந்து பத்திரிக்கையாளர்கள் காரைக்குடி வடக்க காவல் நிலையத்தில் பகார் அளித்துள்ளனர்