
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி சங்க டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா மார்ச் 29-ஆம் தேதி சனிக்கிழமை, காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

காரைக்குடி ரோட்டரி சங்க டயாலிசிஸ் சென்டரை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் திறந்துவைத்தார்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான் கான் சலீம், நன்கொடையாளர் வீர.நாராயணன், மாங்குடி எம்எல்ஏ,மருத்துவர் குமரேசன், விவேகானந்தன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர் லெட்சமணன், செயலாளர் அடைக்கப்பன், பொருளாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி &படங்கள்
சிங்தேவ்