காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே நாளை சிறப்பு ரயில் சேவை..


நாளை ஒரு நாள் காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலி 10மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில் மதியம் 1.00 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு சென்றடையும் என்றும் மறுமார்கமாக பட்டுக்கோட்டையில் இருந்து 03.35மணிக்கு புறப்படும் ரயில் மாலை 06.00மணிக்கு காரைக்குடி வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . இந்த ரயில் சேவை நாளை ஒரு நாள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரயில் தினமும் இயங்கும் அட்டவணை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.