காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல் முடிவு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினிக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்து பிரியதர்ஷினி பதவியேற்க தடை விதித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றி அறிவிப்பு செல்லும் எனக் கூறியுள்ளது.