காரைக்குடி வழியாக கொல்கத்தா( ஷாலிமார்)To நெல்லை புதிய இரயில் : காரைக்குடியில் உற்சாக வரவேற்பு..

காரைக்குடி தொழில் வர்த்தகக்கழகம்,இரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்றாக காரைக்குடி வழியாக ஷாலிமார்( கொல்கத்தா)To நெல்லை புதிய இரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய இரயிலுக்கு இன்று காலை காரைக்குடியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.


ஷாலிமார் To நெல்லை – No : 06087/06088)செல்லும் புதிய இரயில் இன்று (சூலை – 22) திங்கள் காலை (07:10 க்கு வர வேண்டியது) 09:30 க்கு தாமதமாக வந்தது. காரைக்குடி பயணிகள் சார்பாக அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரைக்குடி இரயில் நிலையத்திற்கு காலை வந்த “ஷாலிமார் – நெல்லை “புதிய வண்டியின் ஒட்டுநர்களான கருமாரியப்பனுக்கும், ஸ்ரீஜித்துக்கும் வரவேற்பு கொடுத்து தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமிதிராவிடமணி, காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தலைவர் VR. இராமநாதன் (எ) மோகன் K ஆகியோர் புதிய இரயிலை வரவேற்று பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
நமது தொழில் வர்த்தக சங்கம்(சேம்பர்ஆப் காமர்ஸ் )சார்பில் வைத்த கோரிக்கைக்கு “நெல்லை – ஷாலிமார் (கொல்கத்தா – WB) வரை புதிய ரயில், வாரம் (இருமுறை) சூலை – 18 & 25 வியாழன் களிலும், மறுமார்க்கத்தில் (சூலை – 20& 27) சனிக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்