கார்த்திக் சிதம்பரம் சென்னையில் கைது..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டில்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை கைது செய்துள்ளனர். ஐஎன்எகு்ஸ் மீடியா முறைகேட்டிற்காக உதவியதாக கார்த்தி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே விவகாரம் தொடர்பாக ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கார்த்தி சிதம்பரத்தை இன்று மாலை டில்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.