கார்த்தி சிதம்பரம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார்..


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாளம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இன்று காலையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

லண்டன் சென்று திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி, டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதற்காக அவர் டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.