காஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது.

இந்த கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதல் குறித்தும், அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும் என தெரிகிறது. .

பாராளுமன்ற நூலக அரங்கில் இந்த கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது