காஷ்மீர் பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை போலீசார் துன்புறுத்தக் கூடாது : மெகபூபா முப்தி..

காஷ்மீர் மாநில பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை போலீசார் துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டிய போலீசார், குடும்பத்தினரை துன்புறுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.