காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் கொலை..

 காஷ்மீரின் சோபியான் பகுதியில் 4 போலீசாரை பயங்கரவாதிகள், இன்று (செப்.,21) அதிகாலை கடத்திச் சென்று 3 பேரை கொன்றனர்.

இவர்கள் சிறப்பு போலீஸ் படை அதிகாரிகள். கடத்திச் சென்ற போலீசாரை பதவி விலகும் படி பயங்கரவாதிகள் மிரட்டி உள்ளனர்.

மறுத்ததால் 3 பேரை கொலை செய்தனர். அவர்களின் உடல்கள் சோபியான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் நிலைமை தெரியவில்லை.

கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காரணத்தால் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கடத்தி, கொலை செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போலீசாரை கடத்தி கொன்ற பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.