கேரள மழை வெள்ளத்தை அதி தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு.


கேரளா மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 361 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 40 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 87 ஆக உள்ளது.

கேரளா முழுவதும் மழை வெள்ளம், நிலச்சரவால் 17,343 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு அதிதீவிர பேரழிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.