கன்னியாகுமரியில் குளச்சல் மீனவர்களுக்கு மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கட்சியைத் தொடங்கியது முதல் நாடு முழுவதும் மக்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்து வருகிறார் கமல்ஹாசன். தற்போது மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, குளச்சல் பகுதியிலுள்ள மீனவர்களுக்கு மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, கன்னியாகுமரி பகுதியில் கமல் செல்லும் வழியில், ஒரு பெண் விபத்துக்குள்ளாகி ஆம்புலஸ்க்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். அவர்களை பார்த்த கமல், உடனே தனது காரில், அந்தப் பெண்ணை ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, திறந்த வாகனத்தில் அப்பகுதியில் மக்களியிடையே பேசியுள்ளார்.