கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 9வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை


கடந்த சில நாட்களாக கோடை மழை தமிழகத்தில் ஆங்காங்கு பரவலாக பெய்து வருகிறது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக 9வது நாளாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்