குட்கா விவகாரம்:மு.க. ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தார்.

சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்து சென்றது உரிமை மீறல் என சபாநாயகர் அனுப்பிய புதிய நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.