குட்கா விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல்…


குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக தரப்பை விசாரிக்க கேவியட் மனு செய்துள்ளது. கடைகளில் குட்கா, பான்மசாலா விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி கடைகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படுகிறது. குட்கா விற்க அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு குட்கா மொத்த வியாபாரி லஞ்சம் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.