குவைத்: சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு


குவைத்தில் ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
குவைத் அரசு தரப்பில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது
ஆவணங்கள் இல்லாமல் குவைத்தில் தங்கியிருப்பவர்கள், ஆவணம் இல்லாமல் பதிவு செய்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால்நாளை காலை 7 மணிக்குள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றால் அங்கிருந்து அவர்கள் பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இதனை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது.