இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்களை இலங்கை அரசு அழித்து வருவதாகக் கூறி,

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக முழங்கங்களை எழுப்பினர்.