இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அமெரிக்கா வலியுறுத்தல்..

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அதிபர் சிறிசேனாவை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை செய்ய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

குழப்பமான அரசியல் சூழலால் இலங்கையில் கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது