இலங்கை அதிபருடன் நாடாளுமன்ற சபாநாயகர் திடீர் சந்திப்பு..

பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை திடீரென சந்தித்து உள்ளார்.

அந்நாட்டு பிரதமராக இருந்த ரணிலை நீக்கி விட்டு ராஜபக்சேவே சிறிசேனா நியமித்து உள்ளதால் அங்கு அரசியல் நெருக்கடி உருவாகி உள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு, அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவை புதன்கிழமை மாலை 5 மணிக்கு சந்தித்தார்.