தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர் கலைஞர்: நினைவேந்தல் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்..


சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர் கலைஞர் என்று குலாம் நபி ஆசாத் புகழ் அஞ்சலி செலுத்தினார். நாட்டின் ஒற்றுமைக்கும்,

ஒருமைப்பாட்டுக்கும் பாடுபட்டவர் கலைஞர் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு முதலாவதாக இட ஒதுக்கீடு அளித்த பெருமை கலைஞரை சேரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.