மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VVPAT இயந்திரம் : தேர்தல் ஆணையம் உறுதி..

வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு வழங்குவது 100% அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

VVPAT இயந்திரம் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் வாக்காளர்கள் அனைவருக்கும் ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது