வரும் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்டுவோம்: பாஜக சூளுரை..

வரும் மக்களவைத் தேர்தலில் 2014-ஐக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பாஜக சூளுரைத்துள்ளது.

பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு சந்திப்பு இன்று (சனிக்கிழமை) தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் அமித் ஷா விழாவைத் தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் கூறும்போது, ”நிகழ்ச்சியில் ‘அஜேய் பிஜேபி’ (வெல்ல முடியாத பாஜக) என்று முழக்கமிடப்பட்டுள்ளது.

சந்திப்பில் கலந்துகொண்ட தேசியமட்டத் தலைவர்களும், மாநில பாஜக தலைவர்களும் இவ்வாறு முழக்கமிட்டுள்ளனர்..

பாஜகவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 2014-ல் தனிப் பெரும்பான்மையுடன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

அதைக்காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று பாஜகவினர் தற்போது உறுதி பூண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றியைப் பெறும் வகையில் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் தற்போது அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் பாஜக அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது.

நாளை விழா முடிவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.