மக்களவைத் தேர்தலில் போட்டியிட 932 வேட்புமனுக்கள் ஏற்பு..

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தேர்தலில் வேட்புமனுக்கள் நேற்று முன் தினம் முடிவடைந்தது.

நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில்  932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

மேலும் 623 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அதிக பட்சமாக கரூரில் 43 வேட்புமனுக்களும், குறைந்த பட்சமாக நீலகிரியில் 10 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.