‘‘நீண்ட உரை; ஆனால் ஒன்றுமில்லை’’ : பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து

பட்ஜெட் வரலாற்றில் இது தான் நீண்ட உரை, ஆனால் அதில் ஒன்றும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதாவது:

‘‘நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இதற்கான எந்த தீ்ர்வும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இதற்கான ஒருங்கிணைந்த யோசனைகளும் இல்லை.

இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் வரலாற்றில் இது தான் நீண்ட உரை. ஆனால் அதில் ஒன்றும் இல்லை’’ எனக் கூறினார்.