காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்யத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது.

கடலுார்,நாகை காரைக்கால்,திருவாரூர்,தஞ்சை,புதுக்கோட்டை,சிவகங்கை,இராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.