LPG லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது….

LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென்மண்டல LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில்,

5 ஆயிரத்து 500 LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த லாரிகள் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து,

சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. முந்தைய 5 ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில்,

அதன் பிறகு போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் படி அனைத்து LPG டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

முந்தைய 5 ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்து புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

அப்போது 5 ஆயிரத்து 500 டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் தற்போது 4 ஆயிரத்து 800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணி கிடைப்பதால்

எஞ்சிய 700 டேங்கர் லாரிகளுக்கு பணி வழங்கக் கோரியும் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் தென்மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.