இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகை..


இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை ரணில் சந்தித்துப் பேசுகிறார். பிரதமருடனான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையிலான மீனவர்கள் பிரச்சனை, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.