விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் இம்முடிவை அறிவித்து உள்ளது.

தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுப்பதால்

தடையை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.