ராகுலுடன் பேருந்தில் பயணித்த ஸ்டாலின்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக தலைவர் ஸ்டாலின் பேருந்தில் பயணித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

இந்த மூன்று மாநிலங்களிலும் இன்று காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

முன்னதாக ராஜஸ்தானில், அசோக் கெலாட் முதலமைச்சராகவும், சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இதற்காக, டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆகியோருடன் திமுக தலைவர் ஸ்டாலினும் பேருந்து மூலமாக பயணம் மேற்கொண்டார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சரத்யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்தும், சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல்லும் முதலமைச்சர்களாக இன்று பதவியேற்கின்றனர்.