மலேசிய மணலை இடம் மாற்ற அனுமதி..


தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டைப் போக்க மலேசியாவிலிருந்து தனியார் நிறுவனம் மணலை இறக்குமதி செய்தது. மணலை வெளியில் எடுக்க தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்தது.

அந்த மணல் துாத்துக்குடி துறைமுகத்தில் இருப்பதால் துறைமுக கட்டணம் நாள்ஒன்றுக்கு ரூ.6 லட்சம் வாடகை கொடுப்பதால் மணலை இடமாற்ற தனியார் நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் மணலை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதி வழங்கியுள்ளது.