மதுரையில் ஏப்ரல் 18-ந்தேதி இரவு 8-மணி வரை வாக்குபதிவு..

மக்களவைத் தேர்தல் நடைபறவுள்ள ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேதியை மாற்றி வைக்க அனைத்து தரப்பிரனரும் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்“ வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதனையடுத்து தேர்தல் ஆணையம் மதுரை தொகுதிக்கு மட்டும் வாக்குபதிவு காலை-7 மணிக்கு தொடங்கி இரவு 8-மணிவரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது