மதுரையில் சித்திரை திருவிழாவிற்காக தேர்தல் தேதி மாற்ற இயலாது தேர்தல் ஆணையம் ..

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் மதுரையில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடைபெறுவதை

தள்ளி வைக்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு பதிலளித்தது.

பதிலில் மதுரையில் சித்திரை திருவிழாவிற்காக தேர்தல் தேதியை மாற்ற இயலாது என்று தெரிவித்துள்ளது.

இதுபோல் தவக்காலம் என்பதால் கிரிஸ்தவ பள்ளிகளில் வாக்குபதிவு நடைபெறும் இடங்களை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு தேர்தல் ஆணையம் வாக்குபதிவு நடக்கும் இடங்களை மாற்ற இயலாது என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.