மதுரை சித்திரை திருவிழா : 30-ம் ந்தேதி கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.


தமிழகத்திலே மிகப் பிரசித்தி பெற்றதும் சைவை,வைணவ சமயத்தினர் ஒரு சேர கொண்டாப்படும் திருவிழாதான் மதுரை சித்திரை திருவிழா. முதல் பத்து நாள் மீனாட்சி திருவிழா அதனை தொடர்ந்து அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் திருவிழா.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகாலை 5.45 முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.