மதுரையில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் 5 பேர் தீக்குளிக்க முயற்சி..


தங்கள் மகன்கள் மீது போலீசார் பொய்வழக்கு தொடருவதாகவும் எண் கவுண்டரில் கொல்ல முயற்சிப்பதாக குற்றம் சாட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை தடுத்து பாதுகாத்தனர்.