மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை : முதல்வர் அறிவிப்பு..


மதுரை அலுகே தோப்பூரில் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது தமிழகத்தில் மதுரை தோப்பூரில் அமைய உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கரில் 1100 கோடி செலவில் 750 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையாக அமையவுள்ளது. மருத்துவமனை அமைய காரணமான பிரதமர்,சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.