மேகதாது போராட்டம் அரசியலுக்காக அல்ல, உழவர் கண்ணீரை துடைக்கவே: திருச்சிஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு..

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசுக்கு அணைகட்ட அனுமதியளித்ததை எதிர்த்து திரு்சியில் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி, விசிக தலைவர்

திருமாவளவன்,மார்க்.கம்யூ தலைவர் பாலகிருஷ்ணன்,இந்தியகம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் உட்பட பல எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது
சட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே உழவர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டவர் கலைஞர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தற்போதைய போராட்டம் அரசியலுக்காக அல்ல,
ஊழவர் கண்ணீரை துடைக்கவே என கூறியுள்ளார்.
மேலும், கஜா புயல் தாக்குதலால் ஏற்கனவே காவிரி டெல்டா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.