மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், மூத்த தலைவர் சோனியாவும் மகாத்மா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் பல தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.